இலங்கை
சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் என 2723 பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, 105 இராணுவ படகுகளும், 107 கடற்படை படகுகளும், 20 விமானப்படை படகுகளும் மற்றும் 7 பொலிஸ் படகுகளும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
80 இராணுவ குழுக்கள் மற்றும் 130 கடற்படை குழுக்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் விமானப்படையின் 6 உலங்கு வானூர்திகளும், இராணுவத்தின் 64 கனரக வாகனங்களும், 40 உழவுஇயந்திரங்களும், 2080 இராணு வீரர்கள், 520 கடற்படை வீரர்கள், 80 விமானப்படை வீரர்கள் மற்றும் 43 பொலிஸார் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. (ச)