இலங்கை

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Published

on

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் என 2723 பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, 105 இராணுவ படகுகளும், 107 கடற்படை படகுகளும், 20 விமானப்படை படகுகளும் மற்றும் 7 பொலிஸ் படகுகளும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Advertisement

80 இராணுவ குழுக்கள் மற்றும் 130 கடற்படை குழுக்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் விமானப்படையின் 6 உலங்கு வானூர்திகளும், இராணுவத்தின் 64 கனரக வாகனங்களும், 40 உழவுஇயந்திரங்களும், 2080 இராணு வீரர்கள், 520 கடற்படை வீரர்கள், 80 விமானப்படை வீரர்கள் மற்றும் 43 பொலிஸார் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version