இலங்கை
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் நேற்றுக் காலை திறக்கப்பட்டுள்ளன. மேலும், தெதுரு ஓயா, இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ மற்றும் கலாவெவ ஆகியவற்றின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
