சினிமா

சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிகை கௌதமி!

Published

on

சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிகை கௌதமி!

சின்னத்திரை தொடரில் நடிகை கௌதமி மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

Advertisement

கோலிவுட்டில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் கௌதமி. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் 2015ல் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் கவனம் செலுத்தினார்.

சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் கௌதமி. அண்மையில் அதிமுகவில் இணைந்த இவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரை தொடர் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

Advertisement

ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தொலைக்காட்சி தொடர்தான் அது.

இதில் நாயகி ரேஷ்மாவின் அம்மாவாக கௌதமி நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version