இலங்கை

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவு!

Published

on

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவு!

இலங்கையில் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளின் பிரச்சினைக்கு தீர்வு காண, விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, ஒரு சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது.

இந்த முயற்சியானது நிலையான கட்டுப்பாட்டுக்கான பல உபாயங்களை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நேற்று  இடம்பெற்றுள்ளது.

தேங்காய் மற்றும் பழங்கள் போன்ற முக்கிய பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் டோக் குரங்குகள் மற்றும் பிற விலங்குகளை கட்டுப்படுத்த நிலையான நடவடிக்கைகளை அடையாளம் காண்பது குறித்து, இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியதுடன் 

உடனடி மற்றும் செயற்படக்கூடிய வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான திட்டங்கள் கலந்துரையாடலின்போதும்  பேசப்பட்டுள்ளன.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version