இலங்கை

2024இல் இதுவரை 497 இந்திய மீனவர்கள் கைது!

Published

on

2024இல் இதுவரை 497 இந்திய மீனவர்கள் கைது!

இந்த ஆண்டில் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

Advertisement

கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள், குறைபாடுகளை தீர்ப்பதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version