இலங்கை
கிளி. யில் இராணுவத்தால் புதிய நிரந்தர வீடு கையளிப்பு!
கிளி. யில் இராணுவத்தால் புதிய நிரந்தர வீடு கையளிப்பு!
இராணுவத்தின் 75ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று இன்று புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவின் எண்ணக் கருவுக்கு அமைவாக 55ஆவது காலாட்படை பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக தேசியப் பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினருக்கு கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்று நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளது.(ச)