இலங்கை

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்கள் பறிமுதல்!

Published

on

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்கள் பறிமுதல்!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய நான்கு டிப்பர்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை(29) பொலிஸார் டிப்பர் சாரதிகளுடன் டிப்பர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

  இவ்வாறு டிப்பருடன் கைதுசெய்யப்பட்ட சாரதிகளை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம். சதுரங்க தெரிவித்துள்ளார். (ச) 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version