இலங்கை
இயக்கச்சி இராவணன் வனத்தில் சிலை உடைப்பு!
இயக்கச்சி இராவணன் வனத்தில் சிலை உடைப்பு!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின் தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இராவணன் வனப்பகுதியில் பொன் சுதனால் அவரது தந்தையின் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலையின் முகப்பகுதியை விசமிகள் சிலர் கடந்த (21) வியாழக்கிழமை உடைத்துள்ளனர்.
சம்பவம் அறிந்து உடனடியாக கண்காணிப்பு கமராவை ஆய்வு செய்த போது சம்பவதினம் அன்று சி.சி.ரிவி கேமரா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
தன்மேல் இருக்கும் அரசியல் முரண்பாட்டால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென யூகம் தெரிவித்த அவர், திடீரென சி.சி.ரிவி கேமரா நிறுத்தப்பட்டதையும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.