இலங்கை
உழவனூரில் கேரளா கஞ்சாவுடன் முதியவர் கைது
உழவனூரில் கேரளா கஞ்சாவுடன் முதியவர் கைது
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குருநாகல் கொண்டு செல்வதற்காக பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒரு கிலோ 750 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் 64 வயதுடைய முதியவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (24) நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.