விநோதம்
கற்பூரமும், கராம்பும் சேர்த்து எரித்தால் பணக்கஷ்டம் தீருமா!
கற்பூரமும், கராம்பும் சேர்த்து எரித்தால் பணக்கஷ்டம் தீருமா!
(இன்று ஒரு தகவல்)
சனிக்கிழமைகளில் கற்பூரம் கராம்பு சேர்த்து எரிப்பதால் என்ன நன்மை கிடைக்கும்
வாஸ்த்து சாஸ்திரப்படி நாம் வீட்டில் மகிழ்ச்சியை கொண்டுவர பல வழிகள் இருக்கின்றன.
இதை சிலர் கடைபிடிப்பார்கள் சிலர் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஆனால் இந்த வாஸ்த்து சாஸ்திரங்களை பின்பற்றுவதால் முற்றிலும் நன்மை கிடைக்கின்றது.
இரவு நேரங்களில் கராம்பு மற்றும் கற்பூரத்தை வைத்து கொளுத்தும் போது உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் நீங்கள் அதை கொளுத்தும் போது நினைத்த விஷயம் கண்டிப்பாக நிறைவேறும்.
இதை எரிக்கும் போது வெள்ளிக்கிண்ணத்தில் எரிக்கவும் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட கற்பூரம், கராம்பு மற்றும் ஏலக்காய் நன்றாக வேலை செய்கிறது.
இவை தீய சக்திகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கும் இந்த பொருட்களை பூஜை அறையில் எரித்துவிட்டு அதன் பின்னர் இதன் புகையை வீட்டில் எல்லா இடத்திலும் பரப்ப வேண்டும்.இதனால் வீட்டில் எதிரான தாக்கங்கள் குறைக்கப்பட்டு பணப்பற்றாக்குறை குறையும்.
சனிக்கிழமை மாலை வீட்டில் கராம்பு மற்றும் கற்பூரத்தை எரிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் தருகிறது.
நாம் ஒரு விஷயம் ஆரம்பிக்கும் போது அதை சில தீய சக்திகள் வெற்றி பெற விடாமல் அதற்கு தடையாக இருக்கும். இதன்போது இந்த பொருட்களை வைத்து எரித்தால் இந்த தடைகள் விட்டு போகும்.(ப)