இலங்கை
கிளிநொச்சி ஜெயபுரம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!
கிளிநொச்சி ஜெயபுரம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!
கிளிநொச்சி ஜெயபுரம் பிரதேச மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை வழங்கி வைத்துள்ளது.
கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை மக்கள் பாவனைக்காக இந்த திட்டம் கையளிக்கப்பட்டது.
ஜெயபுரம் பிரதேசத்தில் தரமான குடி நீரினை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குவதுடன் பாரிய அளவில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவையினை வழங்கும் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி, லைக்கா ஞானம் அறக்கட்டளையினூடாக மக்கள் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. (ப)