உலகம்

குருநானக்கின் 555 – ஆவது பிறந்தநாள்; பாகிஸ்தான் நாணயம் வெளியீடு!

Published

on

குருநானக்கின் 555 – ஆவது பிறந்தநாள்; பாகிஸ்தான் நாணயம் வெளியீடு!

சீக்கிய குரு குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு நினைவு நாணயத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த இடமான பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனம் ஆஸ்தான் நான்கானா சாஹிப்பில் அண்மையில் ஆரம்பமானது. இந்த குருத்வாராவில் நடைபெறும் மதச் சடங்குகளில் கலந்துகொள்ள இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள ஏராளமான சீக்கியா்கள் யாத்திரை மேற்கொண்டனர்.

Advertisement

நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்தியா திரும்பும் சுமார் 2,500 இந்தியா்களை அந்நாட்டின் முதல் சீக்கிய அமைச்சரும், பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்த குழுத் தலைவருமான ரமேஷ் சிங் அரோரா வழியனுப்பி வருகிறார். இந்நிகழ்வை முன்னிட்டு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ. 55 சிறப்பு நினைவு நாணயத்தை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கம் குருத்வாரா ஜனம் அஸ்தான் நான்கானா சாஹிப் கல்வெட்டுகளும், மறுபுறம் பிறை மற்றும் நட்சத்திரத்துடன் உருது மொழியில் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயம் 79 சதவீதம் பித்தளை, 20சதவீதம் துத்தநாகம் மற்றும் ஒரு வீதம் நிக்கல் ஆகியவற்றால் ஆனது. 30 மில்லி மீற்றர் விட்டமும், 13.5 கிராம் எடையும் கொண்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version