உலகம்

கென்யா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி!

Published

on

கென்யா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி!

கென்யாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரெசிலா ஒன்யாங்கோ தெரிவித்தார். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

கென்யா உறைவிடப் பள்ளிகளில் தீ விபத்து அடிக்கடி நிகழ்கின்றது. மாணவர்களிடையே ஏற்படும் மோதல்கள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version