இலங்கை

சி.சி.டி.வி கமராவில் அகப்பட்ட முகக்கவசம் அணிந்த திருடன்!

Published

on

சி.சி.டி.வி கமராவில் அகப்பட்ட முகக்கவசம் அணிந்த திருடன்!

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் சி.சி.டி.வி கமரா மூலம் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரவு 1 மணி தொடக்கம் 3 மணி இடைவெளியில் முகக்கவசம் அணிந்து சைக்கிளில் நடமாடுவதாகவும் இதுவரையான காலப்பகுதியில் 8 வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

 வங்கி நிதிநிறுவனங்கள் கம்பெனிகளில் பணிபுரிவோர் மற்றும் மருத்துவர்களின் வீடுகளிலேயே இவ்வாறு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் எனவே பொதுமக்கள் இதுகுறித்து அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய உதவுமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version