இலங்கை

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Published

on

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 3-12 வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 10ஆம் திகதி சீ ஒவ் ஸ்ரீலங்கா எனப்படும் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுட்ட 23 இந்தியமீனவர்களை கைதுசெய்த கடற்படையினர்  மறுநாள் (11) கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

அவர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது இன்றுவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இன்றைதினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் 23 மீனவர்களையும் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 3-12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version