இலங்கை

பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

Published

on

பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் நேற்று கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள  கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீது இருந்த நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 113ஆசனங்களை எடுக்காவிட்டால் இவர்கள் ஏனைய கட்சிகளிடமிருந்து ஆதரவு கோரும்  நிலை ஏற்படலாம் அவ்வாறு ஆதரவு கோரும் போது ஊழல்வாதிகள் உள்வாங்கப்படலாம் என்று குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கக்கூடாது தமிழ் மக்கள் ஒரு பலம் மிக்க அமைப்பாக தமிழ் மக்கள் நாடாளுமன்றத்துக்கு பிரதிநிகளை அனுப்ப வேண்டும் – என்றார். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version