இலங்கை

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிகள் கைது!

Published

on

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிகள் கைது!

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நேற்றைய தினம்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

அந்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் ஒளிப்படத்தை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார், ஒளிப்படத்தைக் காட்டி மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர். 

Advertisement

இதையடுத்து, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். 

முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி இரண்டு பொலிஸ் அதிகாரிகளை கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Advertisement

சந்தேகநபர்களான பொலிஸ் அதிகாரிகளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்  முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version