இலங்கை

மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

Published

on

மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை  மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் Dr. மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை 25.11.2024 சந்தித்துக் கலந்துரையாடினர். 

Advertisement

இதன்போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குவிய மையத்தை (focal point) உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இவற்றைச் சாதகமாக ஆராய்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version