இலங்கை
மாவீரர்களுக்காக இடம்பெற்ற ஆத்மசாந்தி பூஜை
மாவீரர்களுக்காக இடம்பெற்ற ஆத்மசாந்தி பூஜை
தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரமானது கடந்த புதன்கிழமை ஆரம்பமான நிலையில், உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி பூஜையானது இன்றையதினம் (23) கிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்றது.
ஆத்மசாந்தி பூஜையைத் தொடர்ந்து உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறுத்துடையர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கலந்துகொண்டதோடு தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தொடர்பாக உருக்கமாக உரையாற்றினார்.