இலங்கை
முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்களில் குறைப்பு
முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்களில் குறைப்பு
கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர்,
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதுவரை ஆரம்ப கட்டணமாக 200 ரூபா நிர்ணயிக்கப்பட்டதோடு தொடர்ந்து வரும் கட்டணமாக 100ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பெற்றோல் விலைகுறைப்பு காரணமாக ஆரம்ப கட்டணமாக 150ரூபா நிர்ணயிக்கப்படுவதோடு தொடர்ந்து வரும் கட்டணமாக 100 ரூபாவும் அறவிடப்படும்.
அத்துடன் காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஐந்து ரூபாவும் அறவிட தீர்மானித்துள்ளோம்.
கொழும்பில் ஆரம்ப கட்டணம் நூறு ரூபாவாக இருந்தாலும் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் சீரற்று இருப்பதால் இந்த கட்டணத்தை அறவிடுகின்றோம்.
எதிர்காலத்தில் எமது கிளிநொச்சி மாவட்டமும் அபிவிருத்தி அடையும் நிலையில் கொழும்பைப் போன்று கட்டண அறவீட்டைக் கொண்டுவர முடியும் என்றனர்.