உலகம்

வறுமைக்கும் பசிக்கும் பற்றாக்குறை காரணமல்ல – பிரேசில் ஜனாதிபதி!

Published

on

வறுமைக்கும் பசிக்கும் பற்றாக்குறை காரணமல்ல – பிரேசில் ஜனாதிபதி!

வறுமையும் பசியும் பற்றாக்குறை அல்லது இயற்கை நிகழ்வுகளின் விளைவு அல்ல. அது அரசியல் முடிவுகளின் வெளிப்பாடே என்று பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா தெரிவித்துள்ளார். வறுமை மற்றும் பசிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜி 20 நாடுகள் அமைப்பின் மாநாடு பிரேசிலின் தலைநகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இக்கூட்டணி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரேசில் ஜனாதிபதி, உலகளாவிய மொத்த தேசிய உற்பத்தியில் 85 சதவீதத்தை ஜி 20 அமைப்பு நாடுகள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இது 110 ட்ரில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும். அத்தோடு பொருட்கள், சேவைகள் வர்த்தகத்திலும் 75 சதவீதம் இந்நாடுகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

Advertisement

இது உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கு போதுமானதாகும். அப்படி இருந்தும் கூட உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின் படி, 2024 இல் 733 மில்லியன் மக்கள் போஷாக்கின்மைக்கு உள்ளாவர்களாகக் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை, கல்வி, மேம்பாடு மற்றும் உணவுக்கான உரிமைகள் தினசரி மீறப்படுகின்றன. வருடமொன்றுக்கு 06 பில்லியன் தொன் உணவை உற்பத்தி செய்யும் உலகில், இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இராணுவச் செலவு 2.4 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் உலகில், இது நியாயப்படுத்த முடியாத விடயமும் கூட என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version