இலங்கை

22 மரணங்கள் பதிவு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Published

on

Loading

22 மரணங்கள் பதிவு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில்இ நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2ஆயிரத்து 655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இவ்வருடம்  45ஆயிரத்து நான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல் மாகாணத்தில் கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19ஆயிரத்து 294 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4ஆயிரத்து 999 நோயாளர்களும் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4ஆயிரத்து 791 நோயாளர்களும் 

Advertisement

சப்ரகமுவ மாகாணம் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4ஆயிரத்து 521 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும்  இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version