இலங்கை

கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மனு கையளிப்பு!

Published

on

கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மனு கையளிப்பு!

முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு  கோரி  நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவை கேப்பாப்புலவு மக்கள் சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு –  கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின்  காணிகளினை மீட்டுத் தருமாறு கோரிய தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை வடமாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம்  கடந்த மாதம்  ஒப்படைத்திருந்தனர்.

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் , “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்  புதுக்குடியிருப்பு தனியார் பேருந்து நிலைய வளாகத்தினுள்  இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரியகலந்து கொண்ட நிலையில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில்   தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மக்கள் கையளித்திருந்தனர். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version