சினிமா

சாய் பல்லவி என் மூச்சையே நிறுத்திட்டா!! அமரன் படத்தை பார்த்த ஜோதிகாவின் ரியாக்ஷன்..

Published

on

சாய் பல்லவி என் மூச்சையே நிறுத்திட்டா!! அமரன் படத்தை பார்த்த ஜோதிகாவின் ரியாக்ஷன்..

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் அமரன் படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.அரசியல் பிரபலங்கள், சினிமாத்துறையினர் என பலரும் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். தற்போது நடிகர் சிவக்குமார் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா போன்றவர்களும் அமரன் படத்தை பார்த்து படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜெய்பீம் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு தரமான கிளாசிக் படமாக அமரன் படம் வெளியாகி இருக்கிறது என்றும் இந்த வைரத்தை ரசிகர்கள் மிஸ் செய்து விடக் கூடாது என்ற கருத்தினை கூறியிருக்கிறார்.சிவகார்த்திகேயன் இந்தளவிற்கு மெனக்கெடுத்து நடிப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் ஒரு வைரத்தை உருவாக்கி இருக்கிறீர்கள்.சாய் பல்லவி என்னவொரு நடிகை. கடைசி 10 நிமிடக்காட்சிகளில் என் இதயத்தையும் மூச்சையும் அப்படியே நிறுத்திட்டீங்க. மேஜர் முகுந்த் நம்முடனே இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார் என்றும் ரெபேக்கா வர்கீஸின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை என்று பாராட்டியிருக்கிறார் நடிகை ஜோதிகா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version