விநோதம்

சுகரை குறைக்க உதவும் கறிவேப்பிலை விதை.. எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

Published

on

சுகரை குறைக்க உதவும் கறிவேப்பிலை விதை.. எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கறிவேப்பிலை, அதன் சிகிச்சை மற்றும் சமையல் குணங்களுக்காக வெகுவாக அறியப்படுகின்றன. இந்திய சமையலறையில் நீக்கமற நிறைந்திருக்கும் கறிவேப்பிலை, முக்கியமாக அவற்றின் விதைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான இயற்கையான தீர்வாக கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் மருத்துவர்கள் இதை பரிந்துரைக்கிறார்களா?

கறிவேப்பிலை விதைகள் அவற்றின் மருத்துவ குணங்களுக்கு, குறிப்பாக நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் அதன் பங்குகள் குறித்து டாக்டர் ஹரிசரண் ஜி விளக்கம் கொடுத்தார். “கறிவேப்பிலை விதைகள், அதன் இலைகளைப் போலவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பல உயிர்ச்சக்தி கலவைகளைக் கொண்டிருக்கின்றன. இந்த விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது” என டாக்டர் ஹரிசரண் கூறினார்.

Advertisement

சாத்தியமான நன்மைகள்

கறிவேப்பிலை விதைகளில் காணப்படும் மஹானிம்பைன் (Mahanimbine) என்ற வேதிப்பொருள் இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உணவியல் நிபுணர் சிம்ரத் கதுரியா கூறுகிறார். “இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், குடல் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைப்பதன் மூலமும், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும், இந்த பொருட்கள் இரத்த சர்க்கரையை ஒழுங்குப்படுத்த உதவுகின்றன. கூடுதலாக, கறிவேப்பிலை விதைகளின் அதிக நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது இரத்த சர்க்கரை அளவை படிப்படியாக உயர வைக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளன, ”என்று கதுரியா கூறினார்.

Also Read |
உலர்ந்த மற்றும் ஊறவைத்த வால்நட் பருப்புகள்… இரண்டில் எது பெஸ்ட்…?

Advertisement

கறிவேப்பிலை விதைகளை எப்படி சாப்பிடுவது?

கறிவேப்பிலையை உலர்த்தி, பொடி செய்து, தண்ணீருடன் அல்லது உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று டாக்டர் ஹரிசரண் கூறுகிறார். “பொதுவாக தினமும் 1-2 டீஸ்பூன் இந்த பொடியை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இந்த நடைமுறையை சில மாதங்களுக்கு தொடரலாம். ஆனால் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிப்பது மற்றும் பிற மருந்துகளுடன் சேர்ந்து சாப்பிடும் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம், ”என்கிறார் டாக்டர் ஹரிசரண்.

கறிவேப்பிலை விதைகள் நன்மை பயக்கும் என்றாலும் அவை பரிந்துரைக்கப்பட்ட நீரிழிவு மருந்துகளுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடாது என கதுரியா வலியுறுத்தினார். “இதை கூடுதல் முன்னெச்சரிக்கையாகப் பயன்படுத்தப்படலாம். குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் அவற்றின் செயல்திறன் உருவாகிறது. அதேசமய அதிகப்படியான நுகர்வு இரைப்பை குடல் பிரச்சனை அல்லது நீரிழிவு மருந்துகளுடன் தொடர்புகொள்வது உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்”என்று கதுரியா கூறினார்.

Advertisement

கறிவேப்பிலை விதைகளை சரியாகப் பயன்படுத்தும் போது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று டாக்டர் ஹரிசரண் உறுதிப்படுத்தினார். ஆனால் அவை ஒரு விரிவான நீரிழிவு மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மேலும் இந்த புதிய சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவரை ஆலோசிப்பது முக்கியம் ஆகும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version