சினிமா

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து!! தீர்ப்பால் ரஜினிக்கு நிம்மதி கிடைக்குமா? ஏக்கத்தில் கோலிவுட் வட்டாரம்..

Published

on

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து!! தீர்ப்பால் ரஜினிக்கு நிம்மதி கிடைக்குமா? ஏக்கத்தில் கோலிவுட் வட்டாரம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இரு மகன்கள் வளர்ந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வாழ்வதாக அறிக்கை வெளியிட்டார்கள் தனுஷ் – ஐஸ்வர்யா.இதனை அடுத்து சட்டரீதியாக தனுஷ் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு அளித்திருந்தார். பின் மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை. கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகி, விவாகரத்து வேண்டும் என்று நீதிபதியிடம் கூறியிருக்கிறார்கள். இதன்பின், இருவரும் விவாரகத்து வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதால் நவம்பர் 27 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தனர்.இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. என்னமாதிரியான தீர்ப்பு வரப்போகிறது என்று ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே அவலோடு எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.இந்த தீர்ப்பு இரண்டு பேருக்கும் விவாகரத்து இல்லை என்று வந்தால் ரஜினிகாந்தின் உடல்நிலைக்கும் மனநிலைக்கும் நிம்மதி கிடைக்கும் என்றும் இரு மகன்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதேசமயம் அப்படிப்பட்ட தீர்ப்பு வருவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version