இலங்கை

தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொதுவேட்ப்பாளருக்கு ஆதரவு 

Published

on

தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொதுவேட்ப்பாளருக்கு ஆதரவு 

இலங்கைத் தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக  அறிவித்துள்ளனர்

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தமிழரசு கட்சி எந்த ஜனாதிபதி வேட்ப்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் கட்சிக்குள் நிலவி வருகின்ற போதும் நேற்று கட்சி உத்தியோக பூர்வமான இறுதி முடிவை அறிவித்தது இதனடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது

Advertisement

இந்த நிலையில் இன்று(17) மாலை மல்லாவி நகரில் ஒன்றுகூடிய முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளை முக்கியஸ்தர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்டவர்கள் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை அறிவித்தனர்

இதன்படி இலங்கை தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொது வேட்ப்பாளர் அரியநேந்திரனுக்கு  ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் அனைவரையும் தமிழ்ப் பொலுவேட்ப்பாளர் அரியநேந்திரனின் சங்குச்சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version