இலங்கை
பொதுவேட்பாளருக்கு ஆதரவு; மாபெரும் பொதுக்கூட்டம்
பொதுவேட்பாளருக்கு ஆதரவு; மாபெரும் பொதுக்கூட்டம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது, முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.
அதேவேளை, கூட்டத்திற்கு முன்னர் காலை 9 மணியளவில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்தியதுடன் ஊடகச் சந்திப்பொன்றையும் நடாத்தியிருந்தார்.
கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.