இலங்கை

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

Published

on

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

Advertisement

அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 29, 30 மற்றும் 1ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நவம்பவர் மாதம் 27ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும், நவம்பர் 28ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும் நவம்பர் 29ஆம் திகதிக்கான பரீட்சை டிசம்பர் 27ஆம் திகதி இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

அத்துடன் நவம்பர் 30ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28ஆம் திகதியும் டிசம்பர் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த் பரீட்சை டிசம்பர் 30ஆம் திகதியும் டிசம்பர் 3ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 31ஆம் திகதியும் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version