இந்தியா

எதிர்க்கட்சி- அரசு மோதல்; வக்ஃப் திருத்த மசோதா இப்போது இல்லை: பேச்சுவார்த்தைகளை தொடர முடிவு

Published

on

எதிர்க்கட்சி- அரசு மோதல்; வக்ஃப் திருத்த மசோதா இப்போது இல்லை: பேச்சுவார்த்தைகளை தொடர முடிவு

சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பில்லை. இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட  நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு மேலும் சிலரிடம் கருத்துகளை கேட்டுப் பெற கால அவகாசம் கோர உள்ளது.மசோதா நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. கமிட்டியின் எதிர்க்கட்சி உறுப்பினர் அ.ராஜா கூறுகையில், நீட்டிப்பு கோரும் தீர்மானத்தை  முன்வைக்க அவைத் தலைவர் ஜெகதாம்பிகா பால் ஒப்புக்கொண்டார். வியாழக்கிழமை அன்று தீர்மானம் கொண்டு வரப்படும்.குழுவின் பதவிக்காலம் நவம்பர் 29 வரை உள்ளது. விதிகளின்படி, லோக்சபா முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும். குழுவின் பதவிக்காலம் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் வாரம் வரை நீட்டிக்கப்படலாம்.முன்னதாக, புதன்கிழமை நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, பால் கூறுகையில்: “நிஷிகாந்த் (துபே) ஜி மற்றும் அபராஜிதா சாரங்கி மற்றும் திலீப் சைகியா உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் மற்றும் சில மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுபற்றி பேச வேண்டும். நடைமுறைகள் மற்றும் விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்குமாறு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், குழுத் தலைவர் நவம்பர் 29 ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பாலின் அறிக்கை வந்தது.காங்கிரஸின் கௌரவ் கோகோய், திமுகவின் ஆ.ராஜா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் மற்றும் டிஎம்சியின் கல்யாண் பானர்ஜி ஆகியோர், உரிய நடைமுறையை முடிக்காமல் நவம்பர் 29 காலக்கெடுவுக்குள் நடவடிக்கைகளை முடிக்க பால் அவசரம் காட்டுவதாக குற்றம் சாட்டினர்.ஆங்கிலத்தில் படிக்க:    Oppn-Govt Faceoff: No Waqf Bill this Session, panel set to get an extension to continue talksஇந்த சந்திப்பின் போது பாஜகவின் கூட்டணி கட்சிகளான TDP மற்றும் JD(U) ஆகிய கட்சிகளும் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஆதரவு தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. உ.பி., மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களிலும் வக்ஃப் சொத்துகள் தொடர்பாக அரசுக்கும் வக்ஃப் வாரியங்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகிறது. அந்த சொத்துகள் குறித்த அறிக்கையை இன்னும் அனுப்பாததால், இந்த நீட்டிப்பு தேவை என்று ஆளும் தரப்பில் இருந்து குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version