இந்தியா

காவலர்களின் செயல்! சபரிமலை ஐயப்பன் கோயிலில் சர்ச்சை!

Published

on

காவலர்களின் செயல்! சபரிமலை ஐயப்பன் கோயிலில் சர்ச்சை!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடையின் புகழ்பெற்ற 18 ஆம் படியில் நின்று காவலர்கள் குழு புகைப்படம் எடுத்தது தொடர்பாக விளக்கமான அறிக்கை அளிக்க ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் 30 காவலர்கள் பக்தர்களை படியில் ஏற உதவும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு ஒரு குழு தங்கள் பணியை முடித்துவிட்டு, அடுத்த குழுவினருக்கு பணியை ஒப்படைக்கும் முன்பு, 18 படிகளில் நின்று காவலர்கள் 30 பேர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Advertisement

ஊடகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த புகைப்படத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. கோயிலின் 18 படிகளில் நின்று புகைப்படம் எடுப்பதால் கோயிலின் புனிதத்தன்மையை அவமதிப்பு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் புகைப்படம் தொடர்பாக விளக்கமான அறிக்கை அளிக்கக் கோரி ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார். காவலர்கள் குழு புகைப்படம் எடுத்த விவகாரத்துக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :
அமெரிக்கா புகாரில் அதானி பெயர் இல்லை! கிரீன் எனர்ஜி விளக்கம்

Advertisement

காவலர்களின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றமும் கூறியுள்ளது. ஸ்ரீ கோயில் அருகே, திருமுட்டம் பகுதியில் செல்போன்களுக்கு தடை விதிக்கவும் கோயில் செயல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version