இந்தியா
கே. பாலகிருஷ்ணனுக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் சிகிச்சை!
கே. பாலகிருஷ்ணனுக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் சிகிச்சை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே. பாலகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். இவருக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணனுக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நெஞ்சு சளி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (28ம் தேதி) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.