இலங்கை
200 மில்லியன் ரூபாய் பணத்தை சேமித்த அநுர அரசு!
200 மில்லியன் ரூபாய் பணத்தை சேமித்த அநுர அரசு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சத்தியப் பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபாய் பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது சுமார் 200 மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதாகவும்
தமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் இனி மக்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.[ ஒ]