இந்தியா

கேரளாவில் டிஜிட்டல் நீதிமன்றம் – 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்

Published

on

கேரளாவில் டிஜிட்டல் நீதிமன்றம் – 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்

கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை(21) முதல் செயல்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்து வைத்த நிலையில் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

Advertisement

இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம். பிணை பெற கட்சிக்காரர்கள் மற்றும் ஜாமின்தாரர்கள் உள்ளிட்டவர்கள் ஆஜராக தேவையில்லை. அவர்கள் ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version