இந்தியா

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த தந்தைக்கு துாக்கு தண்டணை!

Published

on

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த தந்தைக்கு துாக்கு தண்டணை!

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு கேரள உச்ச நிதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

கடந்த 2021-ம் ஆண்டு உடலில் 67 காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது குறித்து சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை செய்த போது, புகார் அளித்த சிறுமி தாயாரின் இரண்டாவது கணவரான தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (26) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அவர் மீது கொலை, பாலியல் பலாத்காரம், போக்சோ, உள்பட 16 பிரிவின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

Advertisement

இந்த வழக்கு பத்தனம்திட்டா நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் 2-வது கணவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான விபரம் நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால், அது சட்டத்தின்படி வசூலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version