இந்தியா

புகையிலைக்கு தடை

Published

on

புகையிலைக்கு தடை

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை விதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள‌ சுற்றறிக்கையில்

Advertisement

கர்நாடக அரசு ஊழியர்கள் உடல் நலம், பொதுமக்களின் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களை உபயோகித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல அலுவலகங்களில் போதை தரக்கூடிய எந்தப் பொருளையும் உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது.

இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகை, அலுவலகங்களில் பொருத்தமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதை மீறினால் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version