இந்தியா

மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள துருப்பினர்கள்!

Published

on

மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள துருப்பினர்கள்!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 துருப்பினரை இந்திய மத்திய அரசாங்கம் இன்று அனுப்பி வைத்துள்ளது.

மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான துருப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இனங்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் இடம்பெற்றுள்ளதன் காரணமாகவே மேலதிக துருப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலத் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள துருப்பினருடன் சேர்த்து, தற்போது மணிப்பூரில் மொத்தமாக 288 படையணிகள் நிலைகொண்டுள்ளதாகவும் 

கடந்த வருடம் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமான இனக்கலவரத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்ந்தும் ஒரு வருட காலமாக இடம்பெறுவதாகவும் 

Advertisement

இரு இனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் காணாமல் போயுள்ளனர்.

1000 பேர் வரை காயமடைந்துள்ளதாக மருத்துவத் தரப்பினர் தெரிவித்ததுடன் 

60, 000 பேர் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் ,  4 , 786 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் 386 சமய வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version