இந்தியா

ஃபெஞ்சல் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் மூடல்!

Published

on

ஃபெஞ்சல் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் மூடல்!

சென்னை முழுவதும் கனமழை பெய்துவருவதால், சென்னை விமான நிலையம் இன்று (நவம்பர் 30) மாலை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் ‘ஃபெஞ்சல்’ என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது.

Advertisement

வேளச்சேரி, கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் விமான ஓடுதளத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளதால், இண்டிகோ, ஃபிட்ஸ் ஏர் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மகாபலிபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளதால் இன்று மதியம் 12 முதல் மாலை 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாகச் சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version