உலகம்

அதிநவீன ஏவுகணை: ஈரான் விமானப் படை அறிமுகம்

Published

on

அதிநவீன ஏவுகணை: ஈரான் விமானப் படை அறிமுகம்

 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன ஏவுகணையை ஈரான் விமானப் படை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

Advertisement

அந்த நாட்டில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போா் பதற்றம் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் இந்த ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராணுவ தலைமை தளபதி ஹுசைன் சலாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அபு மஹதி ஏவுகணை தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. 1,000 கி.மீ. வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும்.

Advertisement

தற்போதைய உலகத்தில் சரணடைய வேண்டும், அல்லது நம்மை நாமே பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற இரு நிலைப்பாடுகள் மட்டுமே உள்ளன. இரண்டும் இடைப்பட்ட நிலைப்பாடு இருக்கமுடியாது. எனவே, இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்துள்ள ஈரானுக்கு இந்த ஏவுகணை இன்னும் பலம் சோ்க்கும் என்றாா் அவா். [எ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version