உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 70 போ் உயிரிழப்பு

Published

on

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 70 போ் உயிரிழப்பு

 

காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 70 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

Advertisement

இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கான் யூனிஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. இஸ்ரேலால் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளும் இதில் அடங்கும்.

இந்த நிலையில், இஸ்ரேல் படையினா் அங்கு நடத்திய தாக்குதலில் 70 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

Advertisement

இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவால் போா் அகதிகள் முகாம் அமைந்துள்ள அல்-மாவாசி உள்ளிட்ட பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக காஸா பொதுமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தினா். இதில் 1,139 போ் உயிரிழந்தனா். அங்கிருந்து ஏராளமானவா்களை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39,145 போ் உயிரிழந்ததாகவும் 90,257 போ் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version