இலங்கை

புலிகளை அஞ்சலிப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்குக!

Published

on

புலிகளை அஞ்சலிப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்குக!

இலங்கையில் விடுதலைப் புலிகளை அஞ்சலிப்பதற்கு இடம் வழங்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களின் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாவீரர்தினம் கடைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, விடுதலைப் புலிகளை அஞ்சலிப்பதற்கு இடம் வழங்கக்கூடாது என்று விடுதலைப் புலிகளை அஞ்சலிப்பதற்கு இடம் வழங்கக்கூடாது என்று நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார்.

Advertisement

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாம் முழுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பென்பது சட்டவிரோத அமைப்பாகும். அந்த அமைப்பை நினைவுகூர முடியாது. எனது தந்தையையும் புலிகளே கொலை செய்தனர். புலிகளுடன் தொடர்புடையவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதிப்பது தொடர்பான உறுதியான முடிவை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version