உலகம்
மன அழுத்தத்தில் சுனிதா..
மன அழுத்தத்தில் சுனிதா..
கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் போனது.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
இருவரும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் இன் உடல் எடை கணிசமான அளவு குறைந்து விட்டதாகவும், அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த தகவலை நாசா மறுத்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள அனைத்து விண்வெளி வீரர்களும் வழக்கமாக பரிசோதிக்கப்படுவதாக நாசா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சுனிதா வில்லியம்ஸ் உட்பட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.