உலகம்
வடகொரிய இராணுவம் மீது முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ள உக்ரைன் படை!
வடகொரிய இராணுவம் மீது முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ள உக்ரைன் படை!
உக்ரைன் படையினருடன் வடகொரிய இராணுவ வீரர்கள் முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைனின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவுடனான இந்த முதல் போர் உலகில் உறுதியற்ற தன்மையின் புதிய அத்தியாயத்தைத் திறக்கின்றன என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் துருப்புக்கள் நிலைகொண்டுள்ள குர்ஸ்க் எல்லையில் 11ஆயிரம் வடகொரிய வீரர்கள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதென உக்ரென் தெரிவித்துள்ளது.
அண்மை நாட்களாக ரஷ்யாவின் போரில் வடகொரிய துருப்புக்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாக தென்கொரியா,அமெரிக்க உளவுத்துறை மற்றும் நேட்டோ ஆகியவை தெரிவித்தன. ஆனால் மாஸ்கோ மற்றும் பியோங்யாங் இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நேரடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ச)