இந்தியா

Fengal Cyclone: கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல்.. அடுத்த 6 மணிநேரம் உஷார்… – வானிலை மையம் தகவல்!

Published

on

Fengal Cyclone: கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல்.. அடுத்த 6 மணிநேரம் உஷார்… – வானிலை மையம் தகவல்!

Advertisement

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் பலமணிநேரம் கடலிலேயே பயணித்தது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் புயலின் வேகம் படிப்படியாக குறைந்ததால், புயல் கரையை கடப்பது தாமதமானது. இதன் தாக்கம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இன்று காலை முதலே அதிகமான மழைப்பொழிவு இருந்தது.

இந்த நிலையில் தான் தற்போது ஃபெஞ்சல் புயலின் வெளிவட்ட பகுதி காரைக்கால் – மகாபலிபுரம் இடையே மாலை 5.30 மணிபோல் கரையை கடக்கத் தொடங்கியது என்றும், இதன்மூலம் புயல் கரையை கடக்கத் தொடங்கும் நிகழ்வு தொடங்கியது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஃபெஞ்சல் புயல் தற்போது கடற்கரையில் இருந்து 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது புயலின் கண் பகுதி என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்துக்குள் புயலின் கண் பகுதி கரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

புயலின் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ தொலைவில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாக்க இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாக புயல் முழுமையாக கரையை கடக்க 6 மணிநேரம் வரை எடுத்துக்கொள்ளும் என்றும் இந்திய வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று நள்ளிரவு வரை புயல் கரையை கடக்கும் நிகழ்வு நடக்கும் என்றும் நாளை அதிகாலை தான் புயல் முழுமையாக கரையை கடந்த ஆழ்ந்த காற்றுழத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது கரையை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், மழை பொழிவும் இருக்கும், அதேநேரம் கரையை கடந்த பிறகு வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் உள்பகுதிகளில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version