உலகம்

Sri Lanka Rain | கனமழையில் தத்தளிக்கும் இலங்கை… 8 பேர் மாயம்!

Published

on

Sri Lanka Rain | கனமழையில் தத்தளிக்கும் இலங்கை… 8 பேர் மாயம்!

Advertisement

வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான வானிலை நிலவுவதால், இது இலங்கைக்கு அருகில் சென்று நாளை சூறாவளி புயலாக தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நிலவி வரும் மோசமான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இலகையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கரைத்தீவு அருகே பள்ளி மாணவர்கள் சென்ற டிராக்டர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் 8 பேர் மாயமாகியுள்ளனர்.

பதுல்லா பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

Advertisement

🚨 Sri Lanka Faces Severe Floods and Tornado Alerts 🚨 Stay Safe and well prepared 🙏🏻
Heavy rains have caused widespread flooding, landslides, and now tornado warnings in several regions. Thousands are displaced, with authorities working tirelessly on rescue and relief… pic.twitter.com/cfdGABAgQK

ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்புப்பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version