சினிமா

அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Published

on

அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. 

Advertisement

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

இந்த நிலையில், அமரன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமாக கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட ‘அமரன்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

படம் குறித்து பேசிய ரஜினிகாந்த், “முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் படமாக எடுத்த ராஜ்கமல் நிறுவனத்துக்கு நன்றி. நடிகர் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.

கிளைமாக்ஸில் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியான படத்தை எடுத்ததற்காகக் கமல்ஹாசனையும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version