இலங்கை
உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள்!
உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள்!
நெடுந்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா மருத்துவமனைக்கு (28) இன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு மருத்துவமனையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (ப)