இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலவரம்!

Published

on

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலவரம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் நான்காயிரத்து155 குடும்பங்களைச் சேர்ந்த 13ஆயிரத்து251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை வெளியிட்ட புள்ளிவிபரத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து139 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து903 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

Advertisement

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டாயிரத்து141 குடும்பங்களைச் சேர்ந்த 6ஆயிரத்து431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 700 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து329 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும், தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கிராம சேவையாளர் ஊடாக இடர் முகாமைத்துவப்பிரிவு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version