இலங்கை

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஈரானியர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Published

on

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஈரானியர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ஈரானிய பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதிகள் தொடர்புடைய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Advertisement

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இன்று (28) இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள், தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

Advertisement

அதன்படி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version